Friday, 22 October 2010

எனக்காக இருப்பாயா???????


சூரியன் இருப்பது பகலுக்காக
சந்திரன் இருப்பது இரவுக்காக
நீ இருப்பாயா எனக்காக அன்பே .....

காதல்


நான் இருப்பது உனக்காக ..
நீ இருப்பது எனக்காக ..
ஆனால் காதல் இருப்பது நமக்காக ...

அம்மா


தாலாட்டு பாட நீ இல்லையே ..
தலை சாய்த்து கொள்ள மடி இல்லையே ..
என் கண் மூடி தூங்க துணை இல்லையே ..
காதல் என்பது தெய்வம் என்று நினைத்தேனே ..
இப்ப புரியுதே நீ இல்லையேல் இவை யாவும்
ஒன்றும் பெரிதில்லை இல்லை என்று அம்மா ...
..

பொறுமை!!!!!!!!!


மண்ணின் பொறுமை மலை
விதையின் பொறுமை விருட்சம்
கரியின் பொறுமை வைரம்
தாயின் பொறுமை நீ

என் காதல் உனக்கு புரியவில்லையா ..
இல்லை புரியாதது போல நடிக்கிறாயா ?.

உன் இதய கதவை திறக்க முடியாமல் தவிக்கிறாயா ?
இல்லை ஏற்கனவே வேறு யாருக்காவது..... திறந்து விட்டாயா
என்பதை.......

உன் வாய் பூட்டை திறந்து அல்லது உடைத்து கூறு பெண்ணே
உன் காதலுக்காக இதய கதவை திறந்து வைத்து காத்திருக்கும் ஓர் காதலன் .. ..

தொடங்கியே இருக்கமாட்டேன் ...


எனக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளது ..
காரணம் எமது இனிய காதல் செய்த
நாட்களை நினைவுகளை திருப்பி பார்க்க'........
ஆனால் நான் எதிர்பார்க்கவில்லை ..
உன் திருமணநாளை இதில்
குறித்து வைக்கவேண்டிய காலம் வரும் என ..
தெரிந்திருந்தால் இந்த நாட்குறிப்பை
எழுத தொடங்கியே இருக்கமாட்டேன் ...

புரியவில்லையா உனக்கு?


பாட்டு பாடுகிறேன் ..
நம் இனிய காதல் நினைவுகளை தொகுத்து ...
நன்றான பாடல் என்று ரசித்து கேட்கிறாய் நீ
...... பெண்ணே.... ...
புரியவில்லையா உனக்கு அது
நம் காதல் நினைவுகளை தொகுத்து ..
கோர்த்த வரிகள் என்று ..